×

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பேராபத்து நிகழும் முன் அகற்றப்படுமா? செம்பனார்கோவிலில் இன்று மின்நிறுத்தம்

மயிலாடுதுறை, நவ.26: மயிலாடுதுறை அருகே கிடாரங்கொண்டான், மேமாத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.இதன் காரணமாக இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கருவி ஆக்கூர், காளகஸ்தினாதபுரம், மடப்புரம், திருச்சம்பள்ளி, முடி திருச்சம்பள்ளி, பொன்செய், உமையாள்புரம், செம்பதனிருப்பு, கீழையூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், மேலக்கட்டளை, பரசலூர், ஆறுபாதி, நல்லுச்சேரி, ஆணைமட்டம், இரட்டைகுளம், மருதூர், வல்லம், குறிஞ்சித்தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு இன்று (செவ்வாய்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (26ம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், வழுவூர், மணக்குடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


Tags : collector ,disaster ,Chempanarkovil ,
× RELATED கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில...