×

நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெல் அணுகு சாலையில் 1000 பனை விதைகள்

ராணிப்பேட்டை, நவ.13: வாலாஜா உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராணிப்பேட்டை அடுத்த பெல் அணுகு சாலையில் 1000 பனை விதைகள் நடப்பட்டது. வாலாஜா உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள ராணிப்பேட்டை அடுத்த பெல் அணுகு சாலையில் அம்மூர் சமூக ஆர்வலர் கே.விஜயபாஸ்கர் வழங்கிய 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. வாலாஜா நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆர்.பிரகாஷ் தலைமை தாங்கி பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் வாலாஜா நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் த.ஞானராஜ். சாலை ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் வாலாஜா உட்கோட்ட பராமரிப்பில் உள்ள சாலைகளில் வாலாஜா நெடுஞ்சாலைத் துறை மூலம் இதுவரை 1600 மரக்கன்றுகள் சாலைகளின் இரு புறங்களிலும் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Bell Access Road ,Highway Department ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்...