×

இலட்சுமிபுரம் கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா: வசந்தகுமார் எம்.பி. திறந்துவைத்தார்

திங்கள்சந்தை, நவ: 13: திங்கள்சந்தை அருகே இலட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம் ரூ.33 லட்சம் செலவில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சங்கத் தலைவர் பி.எஸ்.பி. சந்திரா தலைமை வகித்தார். சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஸ்டார்வின், பக்தசிரோன்மணி, தேவராஜ், மகேஷ்வரன், நாகூர்கான், வசந்தா, ெஜஸிஹெலன், பத்மவதி, லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ராமதாஸ் வரவேற்றார்.

விழாவில் புதிய அலுவலக கட்டிடத்தை வசந்தகுமார் எம்.பி. திறந்து வைத்தார். பாதுகாப்பு பெட்டகத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த விழாவில் வசந்தகுமார் எம்.பி. மற்றும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் மக்கள் நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் வங்கி வைப்பு நிதிக்கு ரூ.1 லட்சம் வசந்தகுமார் எம்.பி. வழங்கினார். முன்னதாக மேரி ஷாஜினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க செயலர் நிர்மலா நன்றி கூறினார். விழாவில் அனைத்து கட்சி பிரமுகர்கள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Lakshmipuram Cooperative Credit Union Office Building Opening Ceremony: Vasanthakumar MP ,
× RELATED வெயில் அதிகரித்து வருவதால் கோட்டார்...