×

கழுகுமலை கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

கழுகுமலை, நவ.13:கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை, மற்றும் பிற கால பூஜைகள் நடந்தன. மாலை 6 மணிக்கு மேல் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று கழுகாசலமூர்த்தி கோயிலில் இருந்து தொடங்கி கிரிவல பாதை வழியாக மலையைச் சுற்றி கிரிவலம் சென்றனர்.

இதையடுத்து கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவலக் குழு தலைவர் மாரியப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Purnami Girivalam ,Ezhukumalai Temple ,
× RELATED திருவண்ணாமலையில் தொடர்ந்து 3வது...