×

பெண்ணிடம் நகை பறித்த திருடனுக்கு அடி உதை

கோவை, நவ.5 : கோவை குனியமுத்தூர் எம்.எஸ்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுசிலா(68). இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் சுசிலாவிடம் முகவரி கேட்பது போல், திடீரென அந்த வாலிபர் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றார்.

சுதாரித்த சுசிலா நகையை பறிக்க விடாமல் தடுக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் சுசீலாவை தள்ளிவிட்டு நகையை பறித்து செல்ல முயன்றார். அப்போது சுசிலா கூச்சலிட்வே  அக்கம் பக்கத்தினர் திரண்டு அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து கை கால்களை கட்டி அடித்து உதைத்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குனியமுத்தூர் போலீசார் அந்த வாலிபரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த அம்சா(25) என தெரியவந்தது. ெதாடர்ந்து போலீசார் அம்சாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை