×

மருத்துவக் கல்லூரி அமைத்தால் கட்டமைப்புக்கு நிதி வழங்கப்படும் ராமலிங்கம் எம்பி உறுதி

கொள்ளிடம், நவ.5: மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயருக்கு, அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாட்டில் 6 மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைத்திட அனுமதி அளித்துள்ளது. நாகை மாவட்டத்திற்கு தமிழக அரசால் அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறை வட்டத்தில் அமைத்திட தாங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். இதற்கான நிலம் போதுமான அளவு மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது. மேலும், நாகப்பட்டினத்திற்கு அருகே திருவாரூர் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளதால், நாகை மாவட்டத்தின் வடக்கு பகுதியாக உள்ள சீர்காழி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை வட்டங்களில் இருக்கும் பொதுமக்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை வட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைத்திட தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி வழங்க சம்மதிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மேதா...