×

டூவீலர் மீது கார் மோதல்

வலங்கைமான், நவ.5: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா, முனியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் கந்தையன் (60). விவசாயி. இவர் நேற்று மதியம் ஊத்துக்காடு பகுதியில் உறவினரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஆவூர் திருக்கருக்காவூர் சாலையில் வந்துள்ளார். ஊத்துகாடு பகுதியில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும்போது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே விவசாயி கந்தையன் இறந்தார். இச்சம்பவம் குறித்து கந்தையன் மனைவி குமுதா கொடுத்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Car collision ,
× RELATED மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி