×

தொடக்க கூட்டுறவு சங்கத்தில் உர விற்பனையில் முறைகேடு 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை

சிவகங்கை, நவ. 1: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உர விற்பனையில் முறைகேடு செய்த இரண்டு பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருப்புவனம் அருகே பிரமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 1991 முதல் 1993 வரையுள்ள காலத்தில் தனி அதிகாரியாக கணேசன் என்பவரும் மேற்பார்வையாளராக அக்னி என்பவரும் பணிபுரிந்தனர்.

இந்த காலகட்டத்தில் உர விற்பனை செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் சிவகங்கை வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு சிவகங்கை ஜேஎம்(1) கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரததேவி குற்றம் சாட்டப்பட்ட கணேசன், அக்னி இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.400 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு