×

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திண்டுக்கல், நவ. 1: கரூர் மாவட்டம் வெள்ளியணை, கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில் ஆண் சடலம் நேற்று காலை கிடந்தது. இதுகுறித்து மணவாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியம்மாள் திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என்றும், அவரது இடது மார்பில் காமாட்சி எனவும், வலது மார்பில் வர்ஹினி, சுபாஹினி எனவும் பச்மை குத்தப்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : train accident ,
× RELATED ஆந்திராவில் ஏற்பட்ட கொடூரமான ரயில் விபத்து : 19 பேர் பலியான பரிதாபம்!!