×

கந்தர்வகோட்டை பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மண் அகற்றம்

கந்தர்வகோட்டை, நவ.1: கந்தர்வகோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பஸ் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த மண் மேடுகள் அகற்றப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே பெய்த மழையில் மழைநீர் தேங்கியிருந்த காரணத்தினால் மணல் போட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கனமழை பொழிந்த காரணத்தினால் போடப்பட்டிருந்த மண்ணால் சேறும் சகதியும் போல் ஆனது. இதனால் அவ்வழியாக பேருந்துகள் இயக்க முடியாத நிலை இருந்து வந்தது. சில பேருந்துகள் சகதியில் சிக்கி கொண்டதால் அதை எடுப்பதற்கே சிரமமாக இருந்தது. இந்நிலையில் நேற்று கந்தர்வகோட்டை பழைய பேருந்து நிலையத்தில் மண்ணை பெக்லேன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் மற்றும் கந்தர்வகோட்டை ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் மண் அகற்றும் பணி நடைபெற்றது.


Tags : bus station ,Gandharvagoda ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்