×

‘தட்கல்’ ரயில் டிக்கெட் விற்றவர் கைது

வேலூர், நவ.1: வேலூர் மெயின் பஜார் பகுதியில் அனுமதியின்றி தட்கல் ரயில்வே டிக்கெட் விற்பனை செய்வதாக காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்  முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை மெயின் பஜாரில் உள்ள தனியார் டிக்கெட் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, ஒரு கடையில் அனுமதியின்றி தட்கலில் டிக்கெட் விற்றது தெரியவந்தது.  இதையடுத்து கடை உரிமையாளர் கொணவட்டத்தை சேர்ந்த சையது மூசா(39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹1.75 லட்சம் மதிப்பிலான ரயில் டிக்கெட்டுகள், கணினி, பிரிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags :
× RELATED ₹13.12 லட்சம் மோசடி செய்த ஊழியர்...