×

தா.பழூர் அருகே செப்டிக்டேங்கில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

தா.பழூர், அக்.27: தா.பழூர் அருகே செப்டிக்டேங்கில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள் நத்தத்தில் உபயோகமற்ற நிலையில் உள்ள செப்டிக்டேங் ஒன்றில் மழை நீர் நிரம்பி இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக மேய்ந்து ஸவந்த பசு மாடு ஒன்று அந்த செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்துள்ளது. இரவு முழுவதும் செப்டிக் டேங்க் குழியிலே கிடந்துள்ளது. இந்த நிலையில் அவ்வழியாக காலையில் வந்த பொதுமக்கள் சிலர் குழிக்குள் மாடு இருப்பதை கண்டனர்.உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து செப்டிக்டேங்க் குழியினுள் இருந்த தண்ணீரை வெளியேற்றி பசு மாட்டினை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

Tags : greenhouse ,Septur ,
× RELATED பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை 2030-ம்...