×

புதுகை பஸ் நிலையத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

புதுக்கோட்டை, அக்.27: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்து, மாசு மற்றும் ஒலியில்லா தீபாவளியாக கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள புதிய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரபாபு, உதவி சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தில், அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை வெடிப்பதை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கி இருந்தன.

Tags : Diwali ,bus station ,Pudukkai ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்