×

கண்டியாநத்தம் கிராமத்தில் ஆதரவற்றோருக்கு வேட்டிசேலை வழங்கல்

பொன்னமராவதி, அக்.27: பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் ஆதரவற்றோர் 37 நபருக்கு வேட்டி, சட்டை, சேலை வழங்கப்பட்டது. பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் கொன்னையம்பட்டி முன்னாள் ஆசிரியர் சுப்பிரமணியன், தன்னார்வலர்கள் மற்றும் அக்னிசிறகுகள் விளையாட்டு மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஏழைகள் 37 நபருக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மன்ற தலைவர் சங்கர், துணைத் தலைவர் சக்திவேல், பொருளாளர் சிவராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்க இயக்குனர் அழகு மற்றும் இளைஞர் மன்ற நிர்வாகிகள் கண்ணன், சக்திவேல், சுப்பிரமணியன், செல்வம், ராமு உட்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர்.

Tags : Veterans ,orphans ,village ,Kandiyanatham ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...