அரியலூர், அக். 25: அரியலூர் மாவட்டத்தில் 7வது கட்டமாக உடையார்பாளையம் வட்டம் எரவாங்குடி கிராமத்தில் சிறப்பு திட்ட முகாம் இன்று நடக்கிறது. தாசில்தார் தலைமை வகிக்கிறார். முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.