சிவகங்கை, அக். 25:சிவகங்கை அருகே சோழபுரம் ஸ்ரீரமணவிகாஸ் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் தேசிய விளையாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ஸ்ரீரமணவிகாஸ் பள்ளி மாணவ, மாணவிகள் பெண்கள் வாலிபால் மற்றும் ஆண்கள் கேரம் இரட்டையர் பிரிவு ஆகிய மாவட்ட அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றனர்.இதையடுத்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். தடகள போட்டிகளில் ஜூனியர் பிரிவில் 200மீ, 400மீ ஓட்டம், 80மீ தடை ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகியவற்றில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனர்.ஜூனியர் பிரிவில் 100மீ, 200மீ ஓட்டம், 80மீ தடை ஓட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று இப்பள்ளி மாணவர் திவாகர் தனி சாம்பியன் பட்டம் வென்றார். சீனியர் பிரிவில் 100மீ, 200மீ ஓட்டத்தில் வெற்றி பெற்று இப்பள்ளி மாணவர் அபினேஷ் தனி சாம்பியன் பட்டம் வென்றார்.மேலும் பல்வேறு போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் முத்துக்கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.