பெரம்பலூர், அக். 24: பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் கிராமங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் ஆர்டிஓ சுப்பையா ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் தாலுகாவில் செங்குணம், எளம்பலூர், கோனேரிப்பாளையம், வடக்குமாதவி, களரம்பட்டி, வேலூர் ஆகியவை வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வேப்பந்தட்டை தாலுகாவில் பிரம்மதேசம், சாத்தனவாடி, தம்பை, மங்கலமேடு, வாலிகண்டபுரம், தழுதாழை, நெய்குப்பை, காரியானூர், வி.களத்தூர், மேட்டுப்பாளையம், பூலாம்பாடி, திருவாளந்துறை, இனாம் அகரம், அயன் பேரையூர், ரஞ்சன்குடி, எறையூர், வெள்ளுவாடி ஆகிய கிராமங்களும், குன்னம் தாலுகாவில் திருமாந்துறை, எஸ்.ஆடுதுறை, அகரம்சிகூர், ஓகளூர், பெண்ணகோணம் (வடக்கு), பெண்ணகோணம் (தெற்கு), அத்தியூர் (வடக்கு), அத்தியூர் (தெற்கு), பள்ளக்காளிங்கராயநல்லூர், கீழப்பெரம்பலூர், வடக்கலூர், சிறுமத்தூர் ஆகியவை வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல் ஆலத்தூர் தாலுகாவில் கொட்டரை, கொளக்காநத்தம், அயினாபுரம், அனைப்பாடி, ஆதனூர், அல்லிநகரம், சில்லக்குடி, திம்மூர், சாத்தனூர், சிறுகன்பூர் ஆகிய கிராமங்கள் என பெரம்பலூர் மாவட்டத்தில் 47 வருவாய் கிராமங்கள் வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வடக்கிடக்கு பருவமழை துவங்கி விறுவிறுப்படைந்துள்ள நிலையில் வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் என கருதப்படுகிற கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்படி நேற்று பெரம்பலூர் தாலுகாவில் செங்குணம், எளம்பலூர், வடக்குமாதவி, கோனேரிப்பாளையம் ஆகிய 4 கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் அரசு பள்ளிகளில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், வருவாய் ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.