×

கோத்தகிரியில் சுற்றித்திரியம் காட்டுமாடு

ஊட்டி, அக்.24:  கோத்தகிரி பகுதியில் ராம்சந்த் மற்றும் காந்தி மைதானம் வழியாக வந்த நேற்று ஒரு காட்டு மாடு சாலையில் ஆயாக நடந்து சென்றது. சாதாரணமாக காட்டு மாடு நடந்து சென்ற போதிலும், அதனை கண்டு பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த ஒற்றை காட்டு மாடு கடந்த சில நாட்களாக கோத்தகிரி பகுதியில் மக்கள் வாழும் பகுதிகள், பஜார் பகுதிகளில் வலம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், அதனை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு