×

காரைக்காலில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

காரைக்கால், அக்.24: காரைக்காலில் திருமண ஆன 4 மாதத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். காரைக்கால் திருநள்ளாறு முப்பேதங்குடி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ் மகள் ஜெனிபிரியா(21) இவருக்கும், விருதாச்சலத்தைச் சேர்ந்த மெய்சின் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. திருமணம் ஆனபோது, மெய்சின் வெளியூரில் நல்ல வேலையில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், திருமணத்திற்கு பிறகு மெய்சின் வெளியூர் செல்லாமல், உள்ளூரிலேயே வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெனிப்பிரியா கணவரோடு கோபித்துகொண்டு காரைக்காலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெனிப்பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டர். இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 4 மாதம் ஆவதால், தாசில்தார் தேவதாஸ் தனி விசாரணை நடத்தி வருகிறார். வாலிபர் தூக்கிட்டு தற்கொலை : காரைக்கால் திருநள்ளாறு பி.எஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி மகன் சதீஷ்குமார் (33). பெயிண்டர். இவரது மனைவி சத்யப்பிரியா(27). சதீஷ்குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மது அருந்தி வந்த கணவரை மனைவி சத்யப்பிரியா கண்டித்தகாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,Karaikal ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...