சீர்காழி, அக்.24: சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ தலங்களில் 35வது தலமான செம்பொன் அரங்கர் கோயிலில் ஐப்பசி மாத உற்சவத்தை முன்னிட்டு தினந்தோறும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பெருமாள் சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது அருளிச்செயல் தொடக்கம் சாத்துமுறை நடைபெற்றது. பின்பு சேஷ வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் நரசிம்மன், ரகுநாதன், சீனிவாசன், ரமணி, திச்சகர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.