விருத்தாசலம், அக். 24: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருந்துறை மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி நம்பர் பிளேட் இல்லாத மினி டெம்போ ஒன்று மணல் அள்ளிக்கொண்டு சென்றது. அப்போது போலீசார் வருவதை அறிந்த மினி டெம்போ டிரைவர் டெம்போவை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மினி டெம்போவை பறிமுதல் செய்த கம்மாபுரம் போலீசார் காவல்நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.