அதிகரிப்புஓசூர், அக்.24: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக 728 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான நந்திமலை, தொட்டப்பள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு தொடர்ந்து 2வது நாளாக 728 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. 44.28 அடி கொள்ளளவை கொண்ட கெலவரப்பள்ளி அணையில் தற்போது 41.66 கனஅடிக்கு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அணையின் பாதுகாப்புக்கருதி நீர்வரத்தான 728 கனஅடி நீர் முழுமையாக அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.