×

பள்ளிபாளையம்-தோக்கவாடி 4வழிச்சாலை நிலஅளவிடும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

பள்ளிபாளையம்,அக்.23: பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில், தோக்கவாடி வரையில் தற்போதுள்ள நெடுஞ்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. 10.75 கிலோ மீட்டர் வரையிலான சாலையை 4வழிச்சாலையாக மாற்றினால் போக்கவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்கள் குறையும். இதற்கான சர்வே பணிகளில் வருவாய் துறையின் 4வழிச்சாலைக்கான நிலமெடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை-கன்னியாகுமரி 4வழிச்சாலைக்கான, சேலம் நிலம் எடுப்பு தனி திட்ட ஆட்சியர் லதா, நேற்று நிலம் அளவீடு செய்யும் பணியை நேரில் பார்வையிட்டார். தற்போதுள்ள சாலையின் இருபுறங்களிலும் தலா 12 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்து, புதிய 4வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : school road ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ