தேன்கனிக்கோட்டை, அக்.23: தேன்கனிக்கோட்டையில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாச்சியர் அலுவலகத்தில் குடியேறும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாநில குழு லகுமைய்யா, சுந்தரவல்லி, மாவட்ட குழு நஞ்சப்பா, பகுதி செயலாளர்கள் பூதட்டியப்பா, பழனி, நகர செயலாளர் சலாம்பேக் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும், வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பஸ் நிலையத்திலிருந்து வட்டாச்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.