×

வீடுபுகுந்து திருட்டு ஒருவர் கைது

கூடலூர், அக். 16: கூடலூரை அடுத்த கோத்தர் வயல் பகுதியில் கடந்த 9ம் தேதி ஜமால் முகமது என்பவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோக்களை உடைத்து லேப்டாப், ரூ. 2.500 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதே போல் கடந்த ஜூன் மாதம் செம்பாலா எம் ஜி ஆர் நகர் பகுதியில் வசிக்கும் தேவராஜ்  என்பவரது வீட்டில் 8 பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்டது. இது தொடர்பாக கூடலூர் போலீசார் செம்பாலா பாட்டி கடை பகுதியில் வசிக்கும் ராஜா (57) என்பவரை கைது செய்து அவரிடம் திருடப்பட்ட லேப்டாப் செல்போன்கள், நகை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : robbery ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...