×

இல.கணேசன் பேட்டி மின்னல் தாக்கி விவசாயி பலி

பெரம்பலூர், அக். 16:
பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி பலியானார்.பெரம்பலூர் அருகே உள்ள எறையசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வேலு (79). இவர் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை எறையசமுத்திரம் கிராமத்தில் இருந்து அய்யலுார் செல்லும் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வேலு இறந்தார்.

தகவல் அறிந்ததும் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த வேலுவின் அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் எறையசமுத்திரம் பகுதியை சேர்ந்த அருள்மொழி என்பவரது பசு மாடு கல்பாடி செல்லும் சாலையில் மேய்ந்து கொண்டிருந்தது.அப்போது இடி தாக்கியதால் சம்பவ இடத்திலேயே இறந்தது.



Tags : Attack ,Kannesan ,
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது