×

நாகை நகரை அழகுப்படுத்த கலெக்டரிடம் கோரிக்கை

நாகை, அக்.16: அழகான நாகை, வளமான நாகை இயக்கம் சார்பில் நாகை நகரை அழகுபடுத்துவது குறித்து கலெக்டர் பிரவீன் பி நாயரிடம் மனு கொடுத்தனர்.இயக்கத்தின் தலைவர் தமிழரசன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் கோபி, மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பாலமுரளி ஆகியோர் கலெக்டர் பிரவீன் பி நாயரை சந்தித்து மனு கொடுத்தனர். இதில் நாகை நகரின் அழகு குறித்தும், அதை அழகு படுத்துவது குறித்தும், அழகான நாகை, வளமான நாகை இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் தெரிவித்திருந்தனர்.

Tags : Naga City ,
× RELATED பணிகள் முற்றிலும் முடங்கியது...