×

நாற்றுக்கு முதல் மரியாதை திருப்புவனத்தில் முதியவர் மர்மசாவு

திருப்புவனம், அக்.15: திருப்புவனம் மன்னர் குடியிருப்பு அருகே முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருப்புவனம் அருகே பெத்தானேந்தலைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராஜேந்திரன் (55). இவரது மனைவி வசந்தா. கட்டட தொழில் செய்து வரும் ராஜேந்திரன் மேலரத வீதி  மன்னர் குடியிருப்பில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சரோஜா என்பவரின் வீட்டின் வாசலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரின் மர்ம உறுப்பிலிருந்து ரத்தம் கசிந்த நிலையில், போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.சரோஜாவின் புகார்படி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். முதியவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Thiruppavanam ,Marmasao ,
× RELATED வைகை ஆற்றில் எரிவாயு குழாய் எதிர்த்து...