வால்பாறை, அக்.15: வால்பாறையை அடுத்து உள்ளது ஸ்டேன்மோர் எஸ்டேட். நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் இருளாண்டி தன் மகனுடன் எருது கன்றுகளை அப்பகுதியில் சிறுவனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு காவல் காத்திருந்தனர். அப்போது கன்றுகுட்டிகள் கத்தும் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். இதில் கன்றுக்குட்டி கழுத்தில் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. சிறுத்தை வேட்டையாடி உள்ளதை அறிந்து, இருளாண்டி கன்று குட்டி அருகே சென்றுள்ளார். இருளாண்டு வரும் சத்தம் கேட்டதும் அங்குள்ள தேயிலை செடிகளுக்கு இடையே சிறுத்தை ஒடி மறைந்தது. இது குறித்து தகவலின் பேரில் சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து உலா வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.