×

உத்திரமேரூரில் பேனர் கடையில் 50 ஆயிரம் திருட்டு

உத்திரமேரூர், அக். 15: உத்திரமேரூரில் பேனர் கடையில் 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிய 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உத்திரமேரூர் பஜார் வீதியில் பேனர் கடை நடத்தி வருபவர் முகமது ஆசிக். தினசரி காலையில் கடையினை திறந்து இரவு வரை கடை வைத்திருப்பார். இந்நிலையில் நேற்று காலை கடையை திறந்து கையில் வைத்திருந்த ₹50 ஆயிரம் பணத்தை கடை கல்லாவில் வைத்துவிட்டு ஊழியரை கடையில் விட்டு விட்டு வெளியில் சென்றிருந்தார். மாலையில் கடைக்கு வந்து கல்லாவை திறந்து பார்த்த போது பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்போது அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது 12 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் கடைக்கு வந்து கடை ஊழியரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். கடை ஊழியர் தண்ணீர் கொடுத்துவிட்டு அருகில் உள்ள மற்றொரு அரைக்கு பேனர் போட சென்றபின் டிராயரில் இருந்த 50 ஆயிரம் பணத்தினை திருடிச் சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இதுகுறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, 2 சிறுவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : theft ,banner shop ,
× RELATED சென்னையில் கடந்த 7 நாட்களில் திருட்டு...