தேனி, அக்.10: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் முன்பருவ கல்விக்கான குழந்தைகள் சேர்க்கை நடந்தது. இதற்கு தேனி மேலப்பேட்டை இந்து நடார் உறவின்முறைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் வகித்தனர். பள்ளி முதல்வர் பூரணசெல்வி, துணை முதல்வர்கள் மகாலட்சுமி, புஷ்பவள்ளி ஆகியோர் புதிய மாணவ, மாணவியர்களை சேர்த்தனர்.