×

தீயில் குடிசை சேதம்

தாராபுரம்.அக்.4: தாராபுரம் ஓடை தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன்(35). இவரது மனைவி சிந்து (28). கூலித் தொழிலாளிகளான இத்தம்பதியருக்கு சுவாதி, யமுனா இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிற்பகல் இவர்களுடைய குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தீயை தடுத்து அணைக்க முயன்றனர். ஆனால் மளமளவென பரவிய தீயால் குடிசை முழுவதும் எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தாராபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். தென்னைமரத்தின் ஓலைகள் மின் கம்பியில் உரசியதால் தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags :
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...