×

நெடுஞ்சாலை மூடப்படுவதை கண்டித்து தாளூரில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

பந்தலூர், அக்.4:  குன்டல்பேட் தேசிய நெடுஞ்சாலை மூடப்படுவதை கண்டித்து தாளூர் சோதனைச்சாவடி பகுதியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடலூர், பந்திபூர், குன்டல்பேட் தேசிய நெடுஞ்சாலைகள் மூடுவதற்கு மைசூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த கோரி பந்தலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாலை கேரளா தமிழக எல்லைப்பகுதி தாளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு பந்தலூர் ஒன்றிய செயலாளர் மகேசன் தலைமை வகித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, மாவட்ட செயலாளர் சகாதேவன், மாவட்ட பொருளாளர் மன்னரசன், பாசறை அமைப்பு செயலாளர் புவனேஷ்வரன் மற்றும் திமுக நிர்வாகி சந்திரபோஸ், எருமாடு வியாபாரிகள் சங்கம் சார்பில் சசிதரன், காங்கிரஸ் கட்சி அனஸ் எடாலத் மற்றும் அசரப் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் விசிக நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்துகொண்டு சாலையை மூடும் நடவடிக்கையை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Visitors ,
× RELATED ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று நிறைவு 1.5 லட்சம் பேர் பார்வை