×

தாளூரில் மது விற்ற 2 பேர் கைது

பந்தலூர், அக்.4 : காந்திஜெயந்தி நாளில் டாஸ்மாக்  கடைகள் மூடியுள்ள நிலையில் தமிழக கேரளா எல்லைப்பகுதியான தாளூர் பகுதியில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக எருமாடு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ திருமலைச்சாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனைசெய்தபோது அதே பகுதியை சேர்ந்த தியாகி பாலன் (45) ஹரிதாஸ் (50)  ஆகிய இருவரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. பின் அவர்களிடமிருந்து 285 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்குபதிந்து இருவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED 658 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள்...