×

கேரளாவிற்கு கஞ்சா கடத்திய இருவர் கைது

பாலக்காடு, அக்.4: தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு காரில் 4 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.கேரள தமிழக எல்லை கோவிந்தாபுரம் சோதனைச்சாவடி அருகே கலால்த்துறை சிறப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொள்ளாச்சியிலிருந்து கேரளா நோக்கி வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருவர் இருந்துள்ளனர். காரின் பின் சீட்டிற்கு அடியிலும், பேனட் பகுதியிலும் சிறப்பு அறை அமைத்து 4 கிலோ கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது. விசாரணையில், திருச்சூர் மாவட்டம் மதிலகத்தைச் சேர்ந்த ஜிதின் (32), கொடுங்கல்லூரை சேர்ந்த ஹாபீஷ் (22) எனவும், இவர்கள் பழநியிலிருந்து கஞ்சா வாங்கி திருச்சூர் பகுதிகளில் கல்லூரி, பள்ளி மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Kerala ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...