×

இருதரப்பு மோதல்: 9 பேருக்கு வெட்டு

கொடைக்கானல், அக்.4: கொடைக்கானல் மேல் மலைப்பகுதியில் உள்ள பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இதே பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இருவருக்கும் இடையே பாதை பிரச்சனை இருந்து வந்துள்ளது. நேற்று காலை குமரேசன் தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் தோட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை செய்து கொண்டு இருந்தார். அப்போது இவர்கள் செல்லக்கூடிய பாதையை பாலசுப்பிரமணியன் தரப்பினர் கம்பி வேலி போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த குமரேசன் தட்டிகேட்டார். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் குமரேசன், அவரது மகன்கள் ஞானசேகரன், நித்தியானந்தம், உறவினர்கள் பாண்டியம்மாள், கார்த்திக் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதேபோல் பாலசுப்பிரமணி, அவரது தந்தை வேலுச்சாமி, நாகம்மாள், பாலதண்டாயுதம் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு தரப்பும் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். இருதரப்பிலும் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த அடிதடி சம்பவம் பூம்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Conflict ,
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு