×

தாந்தோணிமலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் குடியிருப்போர் அச்சம் சீரமைக்க எதிர்பார்ப்பு

கரூர், அக். 4: கரூர் மாவட்டத்தில் காந்திகிராமம் தெற்கு, வடக்கு மற்றும் தாந்தோணிமலையில் தமிழ்நாடுவீட்டுவசதிவாரிய அரசு ஊழியர்குடியிருப்பு உள்ளது. காந்திகிராமத்தில் 120வீடுகள், .தாந்தோணிமலையில் சுமார் 108வீடுகள். வடக்கு காந்திகிராமத்தில் 100க்கு மேற்பட்டவீடுகள் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடியிருந்து வருகின்றனர்.கரூர் கடந்த 1995ம் ஆண்டு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 1996ல் வடக்குகாந்திகிராமத்தில் குடியிருப்புகட்டப்பட்டது. 50ஆண்டுகளுக்கும் மேலான வீடுகள்தாந்தோணிமலையிலும், 40ஆண்டுகளுக்கும் மேலாக தெற்குகாந்திகிராமத்திலும் வீடுகள் பழமையாக உள்ளன. இவைஎதிலும் பராமரிப்பு பணிகள்கிடையாது. கடந்த 10 ஆண்டுளாக குடியிருப்போர்களே பராமரிப்பு வேலைகளை செய்து சமாளித்து வருகின்றனர்.இதனால் வீடுகளின்பின்புற சுவர்கள் இடிந்து விழுந்துகொண்டிருந்தது. தாந்தோணிமலையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மூன்றாவது மாடியில்உள்ள மேற்கூரை இடிந்து இரண்டாவது மாடியில் விழுந்தது. அந்த வீட்டில் யாரும்வசிக்காததால் எந்த பிரச்சனையும் இல்லை. எனினும் இகுடியிருப்போர் அச்சம்அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: பராமரிப்பு இல்லை. இதனால் கட்டடங்கள் பெயர்ந்து சிமெண்டு காரைகள் இடிந்து விழுந்து கொண்டிருந்தது. தற்போது மொட்டைமாடி மேற்கூரையே இடிந்து விழுந்துள்ளது. வீட்டின் பின்பகுதியில் உள்ள பகுதி கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. புதிதாக வருபவர்கள்தான் இதனை பழுதுபார்க்கின்ற கட்டாயம் ஏற்படுகிறது. மராமத்து பணிகளை குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து செய்யவேண்டும். ஆனால் எதையும் செய்வதில்லை. அவ்வப்போது வெளிப்புறம் மட்டும் ஏதாவது சிமெண்டு பூச்சு வேலைகள் செய்யப்படுகின்றன. மற்றபடி வீட்டிற்குள் எந்த மராமத்து வேலையையும் செய்வதில்லை. இரவு நேரங்களில் பூட்டியவீடுகளில் வெளிநபர் நடமாட்டம் உள்ளது. சாக்கடை செப்டிக் டேங் அடைப்பு சரிசெய்வதில்லை. செப்டிக் டேங்க் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம். திருச்சியில் இருந்து உரிய அதிகாரிகள் வந்துதான் எதையும் செய்யும் நிலை உள்ளது.சராசரியாக 35சதவீதம் தான் தான் குடியிருக்கின்றனர். பழுதாகிகடப்பதாலும், வாடகையை பல மடங்கு கேட்பதாலும் பலர் காரி செய்து வருகின்றனர்.மராமத்து பணிகளை மேற்கொண்டு மீண்டும் வாடகைக்குவிட வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகள் காலியாக இருப்பதால் அரசுக்குத்தான் இழப்பு ஏற்படுகிறது. எனவே உடனுக்குடன் குடியிருப்பதற்கு ஏற்ற வகையில் இருக்குமாறு வேலைகளை செய்யவேண்டும். ஆண்டுக்கணக்கில் வீடுகள் காலியாக இருப்பதை நிர்வாகம் கவனத்தில்கொள்ளவேண்டும்.அரசு ஊழியர்கள் பலர் வீடு கிடைக்காமல் அலைந்துகொண்டும் இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக வீட்டுக்கு வருவோரிடம் ஏற்கனவே செலுத்த வேண்டிய கட்டண பாக்கிகளை செலுத்துமாறு கூறி கட்டாயமாக வசூலிக்கின்றனர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு செலுத்தவேண்டிய, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்றவற்றை புதிதாக வருபவர்கள் செலுத்த வேண்டியதாகிறது. பெருநகர பகுதியாகமாறி விட்டது. இருப்பினும்காம்பவுண்டுசுவர் இன்றி பாதுகாப்பில்லாத நிலை காணப்படுகிறது.அரசு ஊழியர் குடியிருப்பில் பராமரிப்பு என்பதே இல்லை. 5ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது 10ஆண்டுகளுக்கு ஒருமுறையோ தான் மராமத்து பணிகளை மேற்கொள்கின்றனர். அதுவும் வீட்டின் வெளிப்பகுதியில் தான் இந்த பணியும் நடக்கிறது. வாடகைக்கு வருபவர் சுமார் 5ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை செலவு செய்துதான் குடி வரவேண்டிய நிலைமை இருக்கிறது. கொசுத்தொல்லை ஏற்படுகிறது.குடிநீர், மின்சாரம் சம்பந்தப்பட்ட துறையினர் விநியோகித்தாலும் பராமரிப்பு வேலைகளை வாரியம்தான் செய்யவேண்டும் என கூறுகின்றனர்.

வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் திருச்சியில் உள்ளது. எந்த ஒரு தேவைக்கும் அங்கு தான் சென்று வரவேண்டிய நிலைமை இருக்கிறது. கரூர் பகுதியில் 3குடியிருப்புகள் இருப்பதால் இங்கேயே ஒரு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் பணிகள், வடிகால் பணிகள் போன்றவை நகராட்சி வசம் உள்ளது. இவற்றுக்கு நகராட்சி அதிகாரிகளிடமும், வீடு மராமத்து செய்யவேண்டிய பணிகளுக்கு வீட்டுவசதிவாரியம் திருச்சிக்கும் போக வேண்டியதிருக்கிறது. குடிநீர் கட்டணத்தையும், மின்சார கட்டணத்தையும் அவரவர் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பெயரில் வீட்டு எண்ணை குறிப்பிட்டு கட்டி வருகிறோம். இப்பணிகளை ஒருங்கிணைப்பு செய்ய வீட்டுவசதி வாரியம் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். பிறதுறை பணிகளை கண்காணித்து மற்ற துறையினரோடு பேசி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றனர்.

Tags : Residents ,collapse ,house ,apartment ,Tandonimala Housing Board ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்