×

துணை தாசில்தார் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, அக்.4:துணை தாசில்தார் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை தாசில்தார் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, கூடுதல் பொறுப்புகளை கவனிப்போருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது.

இந்நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 40க்கும் மேற்பட்ட துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் தீபக் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் வித்யா தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Tags : Dasildar ,
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...