மதுரை, அக். 1: மதுரையில் காவல்நிலையம் அருகே வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை திடீர்நகரைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம்(30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெபமணி(29). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் அத்திரமடைந்த ஜெபமணி, மாரிச்செல்வத்தை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டு தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர் நகர் போலீசார் இறந்த மாரிச்செல்வத்தின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜெபமணியை தேடி வருகின்றனர்.