×

பிளாக்கில் விற்க வைத்திருந்த 46 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருமங்கலம், அக்.1: திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி, சிந்துபட்டி பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.கள்ளிக்குடியை அடுத்துள்ள வடக்கம்பட்டி காலனியில் எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் பாண்டி(53) என்பவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பாண்டியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிந்துபட்டி எஸ்ஐ குபேந்திரன் வாகைகுளம் கிராமத்தில் ரோந்து பணியில் இருந்தபோது டி.மேட்டுபட்டியை சேர்ந்த காண்டிபன்(60) என்பவர் கிராமத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : breweries ,Block ,
× RELATED கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை...