×

காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

புதுக்கோட்டை,அக்.1: தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களில் விற்பனை நடைபெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார் மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் நாளை (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் மது விற்பனை ஏதும் நடைபெறாது. அவை யாவும் மூடப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

Tags : Closing ,Task Shop ,Gandhiji ,
× RELATED ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக...