×

விசைத்தறி தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

பள்ளிபாளையம், செப்.30: நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க பேரவை கூட்டம், தலைவர் மோகன் தலைமையில் பள்ளிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் வேலுச்சாமி, கோரிக்கைகளை விளக்கி பேசினார். விசைத்தறி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோகன், பொருளாளர் பாலுசாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் முத்துகுமார், அசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விசைத்தறி கூடங்கள் மற்றும் சாயப்பட்டறைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும், இந்த ஆண்டு தீபாவளி போனசாக அவர்கள் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில், 20 சதம் வழங்க வேண்டும். இந்த தொகையை 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், போனஸ் தொடர்பாக தொழிற்சங்கம், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து பேசி, தீர்வு காண வலியுறுத்தி வாகன பிரசாரம் மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

Tags : Electricity Workers Union Congress ,meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...