×

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று நிறைவு

சிவகங்கை, செப். 30: வாக்காளர் பட்டியல் சரிசார்ப்பு பணி இன்று (செப்.30) நிறைவடைய உள்ளதால் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பட்டியலை உடனடியாக சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில்: சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை சரிபார்ப்பு பணி இன்றுடன் முடிவடைய உள்ளது. இப்பணியினை பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவினை சரிபார்க்கவும் மற்றும் விபரங்களை உறுதிசெய்து கொள்ளவும் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை கொண்டு சென்று வாக்குச் சாவடி நிலை அலுவலர் மற்றும் தாலுகா அலுவலகத்தின் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்திட உதவ வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...