×

தூய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா தொடக்கம்

மதுரை, செப். 30: மதுரை டவுன் ஹால் ரோடு தூய செபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தை சத்யன் திருப்பலி நிறைவேற்றி கொடியேற்றி வைத்து, விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து அக்.7ம் தேதி வரை நடக்கும் விழாவில் தினசரி மாலை 6 மணிக்கு நவநாள் செபமாலை வழிபாடும், சிறப்புத் திருப்பலியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அக்.6ம் தேதியன்று மாலை திருப்பலி நடைபெறுகிறது. பின்னர் தேர் பவனி நடைபெறும். அக்.7 அன்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரிட்டோ பாக்கியராஜ் தலைமையில் பங்குப் பேரவையினர் செய்தனர்.

Tags :
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி