×

பூட்டிய வீட்டில் 14 பவுன் நகை திருட்டு

அருப்புக்கோட்டை, செப். 26: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி குமரன் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ்.  இவரது மனைவி சாந்தி (45). முத்துராஜ் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.  சாந்தி நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 14 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டிய வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் நகை வரை திருடு போய்விட்டது.  இதேபோல் திருவிருந்தாள்புரத்திலும் பூட்டிய வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.  தொடர்ந்து கிராம பகுதிகளில் திருட்டுச்சம்பவம்  நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தனிப்படை போலீசார் அமைத்து குற்றச் சம்பவங்களை கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்