×

திருச்செங்கோட்டில் கூட்டு துப்புரவு பணி

திருச்செங்கோடு, செப்.26: திருச்செங்கோடு நகராட்சி 1வது வார்டு சீதாராம்பாளையத்தில், கூட்டு துப்புரவு பணி நடந்தது. நகராட்சி ஆணையாளர் (பொ) சுகுமார் தலைமை வகித்தார். துப்புரவு அலுவலர் நிருபன் சக்ரவர்த்தி முன்னிலை வகித்தார். அனைத்து துப்புரவு பணியாளர்களும் இணைந்து துப்புரவு பணியினை மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியம் குறித்தும், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணுவது குறித்தும் விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. இது குறித்து ஆணையாளர் (பொ) சுகுமார் கூறுகையில், வாரத்தில் புதன், சனிக்கிழமைகளில் துப்புரவு பணியாளர்கள் இணைந்து கூட்டாக துப்புரவு பணியை மேற்கொள்வார்கள்.  இதன் மூலம் துப்புரவு பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும்,’ என்றார்.

Tags : Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்