×

திம்பம் மலைப்பாதையில் புலி நடமாட்டம்

சத்தியமங்கலம்: ஈரோடு பகுதியைச் சேர்ந்த யூசுப் மற்றும் அவரது நண்பர்கள் தனது காரில் நேற்று அதிகாலை தாளவாடி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது 26 வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவர் மீது புலி ஒன்று படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக செல்போனில் படம் பிடித்தனர். வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்ட புலி மெதுவாக எழுந்து சென்று சாலையோர தடுப்பு சுவரிலிருந்து, கீழே இறங்கி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இரவு மற்றும் பகல் நேரங்களில் சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்….

The post திம்பம் மலைப்பாதையில் புலி நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thimpam ,Sathyamangalam ,Yusuf ,Erode ,Thalawadi ,Thimpham ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை