×

பாளை அருகே மயங்கி விழுந்த டிரைவர் சாவு

நெல்லை, செப்.26: மானூர் அடுத்த  மதவக்குறிச்சியை சேர்ந்த வீரபெருமாள் மகன் மாயாண்டி(47). டிரைவர். சீவலப்பேரியில் இவரது தங்கை வீடு உள்ளது. நேற்று முன்தினம் தங்கையை காண மாயாண்டி சீவலப்பேரிக்கு சென்றுள்ளார். அவரது தங்கை சாப்பாடு கொடுத்து அவரை உபசரித்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த மாயாண்டியை உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அவர் இறந்தார். அவர் நெஞ்சுவலியால் இறந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : death ,Pallai ,
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை