×

கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு

நெல்லை, செப். 26: கன்னியாகுமரி மாவட்டம்,கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக ராதாபுரம் கால்வாய்க்கு வரும் 27ம் தேதி முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 75 கனஅடி வீதம் மொத்தம் 194.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும்.இதனால் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Opening ,Kothayaru ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு