×

வியாபாரிகள் திடீர் சாலை மறியல் மணமேல்குடியில் கடல்பசு வேட்டையாடிய 4 மீனவர்கள் சிக்கினர்

மணமேல்குடி, செப்.26:மணல்மேல்குடியில் கடல்பசுவை வேட்டையாடிய 4 மீனவர்கள் சிக்கினர்.புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு புதுக்குடி கிராமத்தில், விற்பனை செய்வதற்காக அரசால் தடைசெய்யப்பட்ட கடல் பசுவை பிடித்து பைபர் படகில் கரைக்கு கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் புதுக்குடி மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுபதி மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, புதுக்குடி சுடுகாடு கடற்கரை அருகே கடலில் நின்றுகொண்டிருந்த படகில் இருந்த படகு உரிமையாளர் புதுக்குடி மாரிமுத்து (45), மற்றும் அதே ஊரை சேர்ந்த ராமு (48), நந்தகுமார் (49), ஜெகதீஷ் கண்ணன் என்ற ரகு (28) ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது சுமார் 4 அடி நீளம், 100 கிலோ எடை கொண்ட கடல் பசு உயிருடன் படகில் இருந்தது. அரசால் தடைசெய்யப்பட்ட கடல் பசுவை விற்பனை செய்வதற்காக வேட்டையாடி வைத்திருந்த குற்றத்திற்காக உயிருடன் இருந்த கடல்பசு, 4 மீனவர்கள் மற்றும் படகை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. உயிருடன் இருந்த கடல் பசுவை கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் வனத்துறையினர் முன்னிலையில் மீண்டும் கடலிலேயே விடப்பட்டது.


Tags : fishermen ,seashore ,
× RELATED திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி